Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவிநாசி சாலையில் சோதனை முறையில் யூ-டர்ன் அமைப்பு

கோவை, ஜூலை 29: கோவையில் போக்குவரத்து சீரமைப்பு பணி மற்றும் நெரிசலை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அவிநாசி சாலையில் உள்ள பிருந்தாவன் ஆடிட்டோரியம் முன்பு சோதனை அடிப்படையில் யூ-டர்ன் முறை அமைக்கப்பட உள்ளது. இந்த சோதனை இன்று முதல் அடுத்த மாதம் 28ம் தேதி வரை 31 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் செல்ல முடிகிறதா? என ஆய்வு செய்வதுடன், வேறு ஏதேனும் மாற்றம் தேவையா? என்பது குறித்தும் ஆராயப்பட உள்ளது. இதுதவிர சின்னியம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பாதசாரிகள் சாலையை எளிதாக கடக்கும் வகையில் பெலிக்கான் சிக்னல் அமைக்கப்பட உள்ளது. இதனால் சின்னியம்பாளையம் பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயனடைவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாற்றத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.