Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

7 கிலோ கஞ்சா, போதைப்பொருள் பறிமுதல்

கோவை,ஜூன்22:கோவையில் 7 கிலோ கஞ்சா, போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வடமாநில வாலிபர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் நேற்று முன்தினம் காந்திபார்க் தடாகம் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே பின்புறம் உள்ள காலி இடத்தில் 3 பேர் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில், விசாரிக்கையில், 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் கஞ்சா விற்ற ஒடிசாவை சேர்ந்த பிரகாஷ் மன்ஹிரா(27), அசாம் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ் லேகா(28), ராஷ்(22) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3.300 கி.கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், சாயிபாபா காலனி போலீசார் பிஎன் புதூர் அருகே கஞ்சா விற்ற பீகாரை சேர்ந்த ஷாஹித் ஆலம்(30) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.