Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோவையில் பணம் கேட்டு மிரட்டி டீ கடைக்காரர் கடத்தல் வழக்கில் மேலும் 3 பேர் கைது

கோவை, ஜூன் 22: கோவையில் பணம் கேட்டு மிரட்டி டீ கடைக்காரரை கடத்திய வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆனது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் வேல்முருகன்(34). கோவை சேரன் மாநகரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது நண்பர் நாகராஜ்(36), இருவரும் கொலை முயற்சி வழக்கில் கைதாகி கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். ஜாமீனில் வெளியே வந்த வேல்முருகன், தனது நண்பர் நாகராஜை 5 மாதமாகியும் ஜாமீனில் எடுக்க முன்வரவில்லை.

இதனால் அவர் வேல்முருகன் மீது ஆத்திரத்தில் இருந்தார். இதனையடுத்து சிறையில் தன்னை சந்திக்க வந்த நண்பர்கள் சிலரிடம், வேல்முருகனை கடத்தி பணம் பறிக்க கூறியுள்ளார். தொடர்ந்து நாகராஜின் நண்பர்கள் சிலர் கடந்த 18ம் தேதி இரவு காரில் வேல்முருகனை கடத்தி ரூ.2 லட்சம் கேட்டு தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்த வேல்முருகன் சம்பவம் குறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.