கோவை, ஜூலை 9: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட அளவில் பள்ளி படிப்பு முடித்த சிலர் உயர் கல்வி கற்காமல் இருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக கல்வித்துறையினர் ஆய்வு செய்து படிக்க சொல்லி கேட்ட போது சில பெற்றோர் தங்களது குழந்தைகள் கல்வி கற்க விருப்பம் இருந்தும் படிக்க அனுப்பவில்லை என தெரியவந்தது. கோவை மாவட்டத்தில் நடப்பாண்டில் உயர்கல்விக்கான தேர்வில் 10408 பேர் இருந்தனர்.
+
Advertisement


