தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

துறையூர் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதர் சிவன் கோயில் கும்பாபிஷேகம்

 

Advertisement

துறையூர், ஜூலை 13: துறையூர் மூங்கில் தெப்பக்குளம் அருகேயுள்ள காசி விஸ்வநாதர் சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் துறையூரில் பெரிய ஏரிக்கரைக்கு மேற்கேயுள்ள மூங்கில் தெப்பக்குளம் காசி விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி ஜூலை 7 முதல் கோவில் அருகே அமைக்கப்பட்ட தனிக்குடிலில் நடைபெற்ற சிறப்பு ஹோமங்கள், பூஜைகளை 52 சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களை ஓதிச் செய்தனர்.

இதையடுத்து சுவாமி அம்பாள் திருக்கல்யாணமும், மாலை சிறப்பு அபிஷேகம் மகா தீபாரதனையும், இரவு சுவாமி அம்பாள் வீதிஉலாவும் நடைபெற்றது. இந்த விழாவில் துறையூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி மட்டுமின்றி பல மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். உபயதாரர்கள் விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் அன்னதானம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் வேணுகோபால் செய்திருந்தார்.

Advertisement

Related News