Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கரூர் மாநகராட்சியில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்

கரூர், மே 18: கரூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. நான்கு மண்டலங்களாக பிரித்து பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில்இ தாந்தோணிமலைஇ சணப்பிரட்டிஇ ராயனூர் இனாம் கரூர், பசுபதிபாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் புறநகர் பகுதிகள் அதிகளவு உள்ளன.

வடகிழக்கு பருவமழை முடிவடைந்து தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளது. வடகிழக்கு பருவமழை சீசன் போது பெய்த மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் கொசுக்கள் அதிகளவு உற்பத்தியாகி பொதுமக்களை பல்வேறு சிரமத்துக்கு உள்ளாகிறது. மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் தற்போது கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே போல் மாநகராட்சிக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளிலும் கொசு ஒழிப்பு பணிகளான கொசு மருந்து தெளிப்பது, வீடுகள் தோறும் அபேட் மருந்து வழங்குவது போன்ற பணிகளை பணியாளர்கள் மூலம் தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பணிகளை தீவிரப்படுத்திட வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.