Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வீட்டிற்கு முன்பு நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு

வேலாயுதம்பாளையம், ஜூன் 11: கரூர் மாவட்டம் புகளூர் ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் குடியரசு மகன் அரசகுமார் (35). இவர்கள் குடும்பத்துடன் தற்போது வள்ளுவர் நகர் பகுதியில் குடியிருந்த வருகின்றனர்.இந்நிலையில் அரசகுமார், தனது பல்சர் பைக்கை விட்டு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார்.

காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. அரசகுமார், அக்கம் பக்கத்திலும் தேடினார் கிடைக்கவில்லை.இதுகுறித்து அரசகுமார் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்