Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சின்னதாராபுரம் அருகே மது விற்றவர் கைது: 26 பாட்டில்கள் பறிமுதல்

அரவக்குறிச்சி, மே.4: சின்னதாராபுரம் அருகே உள்ள ரங்கபாளையம் டாஸ்மாக் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்றவரவரி போலீசார் கைது செய்தனர். சின்னதாராபுரம் அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக சின்னதாராபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சின்னதாராபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சின்னதாராபுரம் அருகே உள்ள ரங்கபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை பின்புறம் சட்டவிரோதமாக மது விற்றது தெரியவந்தது.

அங்கு விற்பனையில் ஈடுபட்ட சின்னதாராபுரம் அருகே உள்ள அம்மன் மண்டபம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் (60) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ. 4200 மதிப்புள்ள 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சின்னதாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.