Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்

கரூர், ஜூன் 3: கரூர் மாவட்டத்தில் 157 கிராம ஊராட்சிகளிலும உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்ன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து கரூர் மாவ ட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 மற்றும் இது தொடர்பான மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள், பெருங்கழிவு உருவாக்குபவர்களை அடையாளம் காணுதல், பழைய கழிவுக்கொட்டும் இடங்களை பட்டியலிடுதல், கழிவுகளைக் கட்டாயமாக நான்கு வழிகளில் பிரித்து உரமாக மாற்றுதல்,

திடக்கழிவுகளைக்கொண்டு செல்லுதல், கிராம ஊராட்சிகளில் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில் சமூகம் மற்றும் மக்கள்பங்கு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை மறுநாள் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, கிராம ஊரா ட்சி பொதுமக்கள் அனைவரும் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கலெக்டர் தெரிவிக்கிறார்.