Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடவூர் அருகே பொது இடத்தில் மது அருந்திய 2 பேர் கைது

கடவூர், மார்ச். 2: கரூர் மாவட்டம் கடவூர் அருகே பாலவிடுதி காவல்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொது இடங்களில் மதுபானங்கள் அருந்துவதாக பாலவிடுதி போலீசாருக்கு பொதுமக்கள் புகாரளித்தனர். தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது பாலவிடுதி காமாட்சிபுரம் பெட்ரோல் பங்க் அருகே அமைந்து உள்ள பொது இடத்தில் குரும்பட்டி ராஜேந்திரன் (36), பாலவிடுதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே புங்கம்பாடி பழனிச்சாமி (28). ஆகியோர் மதுபானங்களை அருந்தியுள்ளனார். இதனை அடுத்து பொது இடத்தில் மதுபானம் அருந்தியதாக ராஜேந்திரன், பழனிசாமி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.