Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

மே தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் இன்று விடுமுறை: கலெக்டர் உத்தரவு

கரூர், மே. 1: மேதினத்தை முன்னிட்டு இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரூர் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மே தினமான் இன்று கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் FL1, FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர்தினமாக (DRY DAY) அனுசரிக்கப்படவேண்டும் எனவும், அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் FL1, FL2 மற்றும் FL3 உரிமம் கூடங்கள் மூடப்பட வேண்டும்.

அன்றைய தினங்களில் விற்பனை ஏதும் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினத்தன்று இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் FL1, FL2 மற்றும் FL3 வரையிலான உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக மதுவிற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.