Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கரூர் மாவட்டத்தில் திணை சாகுபடியில் கூடுதல் லாபம்

கரூர், மே. 1: குறு தானியங்களில் ஒன்றான திணை சாகுபடி மேலாண்மை குறித்து வேளாண்மைத்துறை சார்பில் தெரிவித்துள்ளதாவது: திணையின் ரகங்கள் கோ6, கோ7, விதை அளவை பொறுத்தவரை, வரிசை நடவு ஏக்கருக்கு 4 கிலோ. விதைப்பான் மூலம் விதைப்பதற்கு ஏக்கருக்கு 5 கிலோ. விதை நேர்த்தியை பொறுத்தவரை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.

நிலத்தினை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டு கலப்பை கொண்டு 2 மற்றும் 3 முறை நன்றாக உழ வேண்டும். அடியுரம், தொழு உரம் ஏக்கருக்கு 5 டன், தழைச்சத்து, ஏக்கருக்கு 15 கிலோ, மணிச்சத்து ஏக்கருக்கு 9 கிலோ. வரிசை நடவு 22க்கு 20 செமீ என்ற அளவி்ல் இடைவெளி விடவேண்டும். செடிக்கு செடி 10 செமீ இடைவெளி விட வேண்டும். விதைத்த 15 வது நாளிலும், 40வது நாளிலும் இரண்டு முறை களை எடுக்க வேண்டும். விதைத்த 20வது நாளில் நெருக்கமாக வளர்ந்த செடிகளை கலைக்க வேண்டும்.