தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜல்லி கற்கள், செங்கல் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை தேவை

 

கரூர், ஜூலை 28: வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் வகையில் கரூர் மாநகர பகுதிகளில் திறந்த நிலையில் சரக்கு வாகனங்கள் செல்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், புறநகர்ப்பகுதிகளிலும் அதிகளவு தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த கட்டுமான பணிகளுக்காக ஜல்லிக் கற்கள், செங்கல் போன்ற பொருட்கள் அதிகளவு வாகனங்களின் ஏற்றிச் செல்லப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர், வேன் போன்ற வாகனங்கள் திறந்த நிலையில் செல்கிறது. அவ்வாறு மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகளின் வழியாக செல்லும் போது, காற்றின் காரணமாக து£சு பறந்து, பின்னால் இரண்டு சக்கர வாகனங்களின் வருபவர்களின் கண்களை பதம் பார்க்கிறது.

இதுபோன்ற நிலைகளால் அவ்வப்போது விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கட்டுமான பொருட்களை திறந்த நிலையில் ஏற்றிச் செல்வது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோல மாநகர பகுதிகளில் திறந்த நிலையில் கட்டுமான பொருட்களை ஏற்றிச் செல்லப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Related News