Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கரூர் பகுதியில் கடும் வெயில்

கரூர், ஜூன் 29: கரூரில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர வெயிலுக்கு நிகராக வெயில் வாட்டி வதக்கி் வருவதால் அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வழக்கமாக தமிழ்நாட்டில் ஏப்ரல், மே மாதங்களில்தான் அதிகளவு வெயில் வாட்டி வதக்கும். குறிப்பாக மே மாதத்தில் அக்னி நட்சத்திர வெயில் தாக்குவது வழக்கமான ஒன்று. அதன்படி கடந்த மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் தாக்கி முடிவுக்கு வந்தது. இந்நிலையில், ஜூன் முதல் செப்டம்பர் வரையில் நான்கு மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாக உள்ளது. இந்த காலக்கட்டத்தில்தான் கரூர் மாவட்டம் அதிகளவு மழையை பெற்று வருகிறது.

இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக கடந்த சில நாட்களாக கரூரில் சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதக்கி வருகிறது. காலை 8 மணிக்கு துவங்கும் இந்த வெயில் மாலை 6 மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பினர்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இனி வரும் நாட்களிலாவது மழையை கரூர் மாவட்டம் பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளனர்.