Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளால் போக்குவரத்து இடையூறு

குளித்தலை, ஜூலை 17: குளித்தலை நகர நுழைவுப் பகுதியான பெரியபாலம் முதல் மணத்தட்டை வரை சாலை இருபுறமும் விபத்தை தடுக்கும் வகையில் போக்குவரத்து இடையூறாக ஆக்கிரமித்துள்ள தற்காலிக கடைகளை அகற்றவேண்டுமென கோரிக்கைவைத்துள்ளனர். கரூர் மாவட்டம் குளித்தலை நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள குளித்தலை வரவேற்புப் பலகை அருகே கோழிகள் அடைக்கப்படும் பெட்டி, தேவையற்ற பொருட்கள், குப்பைகள் குவிந்துள்ளன. இதனால் குளித்தலை என்கிற வரவேற்புபலகை சரி வர தெரியவில்லை இந்தப் பகுதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் சென்று வரும் நிலையில், நகரின் அடையாளமாக விளங்கும் நுழைவுப்பலகை அருகே இவ்வாறு அசுத்தமான சூழல் நிலவுவது பார்ப்பவருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும், சாலையோர ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகள் காரணமாக சுகாதாரக்கேடு ஏற்படுகிற்து. மேலும் குளித்தலை நகராட்சி நுழைவு பகுதியான பெரியபாலம் முதல் மணத்தட்டைவரை சாலை இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள் உள்ளதால் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் பேருந்துகள் கனரக வாகனங்கள் முந்தி செல்லும் பொழுது ஒதுங்குவது கூட இடமில்லாமல் ஒரு சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. எனவே குளித்தலை நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேவையற்ற பொருட்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளித்தலை பகுதியில் பெரிய பாலத்தில் இருந்து மணத்தட்டை வரை சாலை ஓரம் இருபுறமும் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.