Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

வானில் வர்ணஜாலம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? வாகன ஒட்டிகள் கோரிக்கை ராயனூர் நினைவு சின்னத்தை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள்

கரூர், மே. 7: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனுார் பகுதியில் கடந்த 1767 முதல் 1799 வரை ஆங்கிலேயே மைசூர் போர் நடைபெற்றது. இந்நிலையில், கரூர் கோட்டையை கைப்பற்றுவதற்காக ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கும், திப்பு சுல்தான் தலைமையிலான மைசூர் அரசுக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்த போரில் யாருக்கும் வெற்றி கிடைக்கவில்லை. மாறாக ஒரு ஒப்பந்தம் மூலம் போர் முடிவுக்கு வந்தது. அந்த போரில் ஏராளமான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாகவே இந்த பகுதியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக இவை பாதுகாக்கப்பட்ட நிலையில, சில ஆண்டுகளுக்கு முன்பு கரூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் நினைவு சின்னத்தை சுற்றிலும் சுவர் எழுப்பி, பல்வேறு வேலைப்பாடுகள்மேற்கொண்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நினைவுத்தூணைச் சுற்றிலும் அதிகளவு ஆக்ரமிப்புகள் உள்ளன. மேலும், மாலை நேரங்களில் குடிமகன்கள் சரக்குடன் உள்ளே சென்று குடித்து கும்மாளம் போடும் நிகழ்வும் தொடர்ச்சியாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும், இதன் மகத்துவம் தெரியாமல் நினைவு சின்னம் முன்பு ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள் அணிவகுத்து நிற்கிறது. இதனை பொதுநல ஆர்வலர்கள் கேட்டால், இது என்ன உன் இடமா? எனக் கேட்டு தகராறிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இதனை பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.