Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரியில் ஊக்கத்தொகை பெற இன்று கடைசி நாள்

நாகர்கோவில், ஏப்.30: உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி செலுத்தி, ஊக்கத்தொகை பெற இன்று கடைசி தினமாகும். தமிழ்நாடு அரசு சார்பில், சொத்து வரி செலுத்துவதை ஊக்கு விக்கும் வகையில், நிதியாண்டின் முதல் மாதத்தில் முதல் 6 மாத தவணையை செலுத்தினால், 5 சதவீதமும் (அதிக பட்சம் ரூ.5 ஆயிரம்), நிதியாண்டு முழுமைக்கும் சேர்த்து செலுத்தினால், 10 சதவீதமும் (அதிக பட்சம் ரூ.10 ஆயிரம்) சலுகையாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. மாறாக தாமதமாக செலுத்தினால் 5 சதவீத வட்டியுடன் வரியை செலுத்த வேண்டும். கடந்தாண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில், இந்தாண்டும், பலரும் அபராத வட்டியை தவிர்த்து ஊக்கத் தொகை பெற ஏப்ரல் மாதம் முதல் தங்களது சொத்து வரியை வீட்டிற்கு வரி வசூல் பணியாளர்கள் வராவிட்டாலும், சம்மந்தப்பட்ட பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வரி வசூல் மையங்களில் செலுத்தி வருகின்றனர். தேர்தல் மற்றும் கோடை வெயில் காரணமாக பலரும், சொத்து வரி செலுத்த மறந்த நிலையில், சொத்து வரிக்கு ஊக்கத் தொகை சலுகை இன்று கடைசி தினம் என்பதால், இன்று மாநகராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் அதிகம் பேர் வரி செலுத்த வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.