Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கன்னியாகுமரியில் டாரஸ் லாரி மோதி மீன்வளத்துறை ஊழியர் படுகாயம் டிரைவர் மீது வழக்கு

கன்னியாகுமரி, ஜன.22: அஞ்சுகிராமம் அருகே மயிலாடி ஜோசப் புரம் பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன். அவரது மகன் சோனி (26). மீன்வளத்துறையில் சாகர்மித்ரா பிரிவில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பணி நிமித்தமாக கோவளத்திற்கு பைக்கில் புறப்பட்டார். மகாதானபுரம் ரவுண்டானா- கன்னியாகுமரி ஜீரோ பாயிண்ட் சாலையில் சிலுவை நகர் திருப்பத்தில் திரும்ப முயன்றபோது பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி பைக் மீது மோதியது. இதில் சோனி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் சோனியை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் டாரஸ் லாரியை வேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதாக தோவாளை அருகே பொட்டல் புதூர் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் கண்ணன் (39) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.