நாகர்கோவில்,பிப்.5: பாலப்பள்ளம் கண்ணன் யோகா குருகுலம் மற்றும் சைமன்காலனி புனித மேரி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்திய 4 வது மாவட்ட அளவிலான யோகாப்போட்டியில் குளச்சல் சாஸ்தான்கரை அரசு தொடக்கப்பள்ளி 15 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 4 ம் வகுப்பு மாணவி தன்யா 2 ம் பரிசும், ஏனய மாணவர்கள் 3 ம் பரிசும் பெற்றனர். இம் மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியை சகாயராணி, யோகா ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
+
Advertisement


