Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

நித்திரவிளை அருகே ஆடு திருட்டு

நித்திரவிளை, பிப். 5: நித்திரவிளை அருகே வாவறை தெக்குமுறி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் (48). கொத்தனார். இவர் வீட்டின் முன்னால் உள்ள கொட்டகையில் தனக்கு சொந்தமான ஆட்டை கட்டியிருந்தார். நேற்று காலை எழுந்து பார்த்த போது ஒரு ஆட்டை காணவில்லை. இது சம்பந்தமாக தேவதாஸ் நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் சென்று அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, நள்ளிரவில் இரண்டு வாலிபர்கள் வந்து ஒரு ஆட்டை கயிற்றுடன் நடத்தி கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. இது குறித்து நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர்.