தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரக்காணம் அருகே கந்தாடு ஏரி உடைந்து வீடுகளில் வெள்ளம் புகுந்தது

 

Advertisement

மரக்காணம், டிச. 2: வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக கனமழை பெய்தது. நேற்றுமுன்தினம் காலை முதல் இடைவிடாமல் இரவு முழுவதும் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. இதனால் மரக்காணம் அருகே கந்தாடு ஊராட்சிக்கு உட்பட்ட பழைய தெரு அருகில் திண்டிவனம் சாலையோரம் உள்ள பெரிய ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஏரியின் கரை உடைந்து, அருகில் இருந்த பழைய தெரு, புதுத்தெரு உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

நள்ளிரவில் வெள்ளம் புகுந்ததை சற்றும் எதிர்பாராத அப்பகுதியினர் வீட்டிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். ஏரிக்கரை உடைந்ததால் தண்ணீர் முழுவதும் வெளியேறியது. தற்போது ஏரி குட்டைபோல் காணப்படுகிறது. கடந்தாண்டு பெய்த கனமழையின் போது ஏரியில் இதே இடத்தில்தான் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது.

இதனால் உடைந்த கரைப்பகுதி ரூ.4 லட்சம் மதிப்பில் கடந்த 3 மாதத்துக்கு முன்பு புதிதாக கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் பெய்த ஒரு நாள் மழையிலேயே புதிதாக கட்டப்பட்ட கரை மீண்டும் உடைந்ததாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறினர். ஏரிக்கரை உடையாமல் இருக்க ஏரியின் மதகு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News