தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஆற்காடு, நவ.8: ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் வள்ளி, தெய்வானை சமேதராக சுவாமி பாலமுருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்த சஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது. இதில் முதலில் கஜமுகனையும், தொடர்ந்து அஜமுகி, சிங்க முகாசூரன், பானுகோபன் ஆகியோரை சுவாமி பாலமுருகன் வதம் செய்தார். இறுதியாக சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியை காண வந்திருந்த திரளான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதில் நாடகக் கலைஞர்கள் தத்ரூபமாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டினர்.

Advertisement

இதற்கான ஏற்பாடுகளை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், செயல் அலுவலர் சங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இரவு சண்முகப் பெருமானுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இன்று மாலை 6 மணிக்கு சுவாமி பாலமுருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அதேபோல் ஆற்காடு தோப்புக்கானா கங்காதர ஈஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement