காஞ்சிபுரம் அருகே சேரும், சகதியுமான மீனாட்சி நகர் சாலை
Advertisement
குறிப்பாக, இச்சாலையில் பாதி தூரம் வரை மட்டுமே சிமென்ட் சாலை அமைக்கப்பட்டும், பிரதான சாலையை இணைக்கும் மீதமுள்ள தூரம் எவ்வித சிமென்ட் சாலையோ அமைக்கப்படாத காரணத்தினால் தான், மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சியளிக்கின்றது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்ளாட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் மீனாட்சி நகரில் ஆய்வு செய்து, சேரும் சகதியுமாக காணப்படும் சாலையை சீரமைத்து சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Advertisement