Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நடைபயிற்சி சென்றவரிடம் செல்போன் பறித்த சிறுவன்

குன்றத்தூர், ஜூலை 29: சென்னை, அண்ணா நகர், டி பிளாக் பகுதியை சேர்ந்தவர் விசுவநாதன் (95). இவர், கடந்த 25ம் தேதி அண்ணா நகர் டவர் பூங்காவில் நடைபயிற்சியை முடித்துவிட்டு, அண்ணா நகர் 3வது மெயின் ரோடு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 இளைஞர்கள், அவரை வழிமறித்து செல்போனை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, முதியவரிடம் செல்போனை பறித்து சென்றது, பெரியமேடு பகுதியை சேர்ந்த அஜய்குமார் (19) மற்றும் அவரது நண்பரான 17 வயது சிறுவன் என்பது தெரிந்தது. நேற்று முன்தினம் போலீசார், அவர்களை கைது செய்தனர். தொடந்து, அஜய்குமாரை புழல் சிறையிலும், சிறுவனை, சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.