தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக தூய்மை வாரத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரையில் குப்பைகள் அகற்றம்

மாமல்லபுரம், செப்.18:ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை உலகம் முழுவதும் தூய்மை வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஒரு வாரம் கடற்கரையை தூய்மை படுத்துவது, குப்பையில்லா கடற்கரையை உருவாக்குவது, குப்பைகள் கொட்டாமல் இருக்க அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், உலக தூய்மை வாரத்தையொட்டி, பிளாஸ்டிக் இல்லா பயன்பாடு குறித்து மாமல்லபுரம் நகராட்சி ஊழியர்கள், கிழக்கு கடற்கரை சாலையொட்டி உள்ள தனியார் ரிசார்ட் ஊழியர்கள் ஒன்றிணைந்து மாமல்லபுரம் கடற்கரையில் ஆங்காங்கே சிதறி கிடந்த தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக் பைகள் மற்றும் காகிதம் உள்ள பல்வேறு குப்பைகளை டன் கணக்கில் சேகரித்தனர். தொடர்ந்து, சேகரித்த குப்பைகளை நகராட்சி ஊழியர்களிடம் தனியார் ரிசார்ட் ஊழியர்கள் ஒப்படைத்தனர். தொடர்ந்து, கடற்கரையில் கண் மூடித்தனமாக குப்பைகளை வீசி விட்டு செல்லாமல், ஆங்காங்கே உள்ள குப்பை தொட்டிகளில் போட்டு கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement

Advertisement