குப்பையில் வீசப்பட்ட ஆண் குழந்தை சடலம்
சோழிங்கநல்லூர், நவ.15: ஈச்சங்காடு சிக்னல் அருகில் உள்ள பாழடைந்த கட்டிடத்தின் அருகே, நேற்று தூய்மை பணியாளர்கள் வழக்கம் போல், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு பிளாஸ்டிக் பையில் பச்சிளம் ஆண் குழந்தை சடலம் கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனே மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
Advertisement
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், 5 மாதமே ஆண் குழந்தை கருவிலேயே உயிரிழந்த நிலையில், ஒரு பெண் குழந்தை சடலத்தை கொண்டு வந்து, குப்பையில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. அந்த பெண் யார் என போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.
Advertisement