தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பருவமழை முன்னெச்சரிக்கையாக தீயணைப்பு துறை சார்பில் மதுராந்தகம் ஏரியில் மழைக்கால மீட்பு ஒத்திகை: மாணவ, மாணவியர் பங்கேற்பு

மதுராந்தகம், செப். 13:மதுராந்தகம் ஏரியில் வடகிழக்குப் பருவமழையொட்டி தீயணைப்பு துறை சார்பில், மழைக்கால சிறப்பு மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அதில், அரசு அதிகாரிகள், பள்ளி-கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவ மழை எதிர் கொள்ளும் விதமாக மாவட்ட தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினர் மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியில் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தீ அணைப்பு துறை அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார்.

Advertisement

மதுராந்தகம் கோட்டாட்சியர் ரம்யா முன்னிலை வகித்தார். மதுராந்தகம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமலை அனைவரையும் வரவேற்றார். இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், மகேந்திரா சிட்டி, செய்யூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மழை வெள்ளத்தால் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உள்ளவர்களை எப்படி மீட்பது, குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தால் வீட்டில் உள்ள வாட்டர் கேன் பிளாஸ்டிக் கேன் காய்ந்த மரங்கள் வாழைமரம் உள்ளிட்ட பொருட்களை வைத்து எப்படி கரை சேருவது, மழை வெள்ளத்தில் சிக்கி மயங்கியவர்களையும் நீரில் மூழ்கி மயங்கியவர்களையும் முதலுதவி சிகிச்சை அளித்து எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், பள்ளி கல்லூரி மாணவர்களிடம் தீயணைப்புத் துறையினர் பயன்படுத்தும் உபகரணங்கள் குறித்து தீயணைப்பு துறையினர் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பாலாஜி, உதவி மாவட்ட அலுவலர் செந்தில் குமரன், நிலை அலுவலர்கள் வீரராகவன், ரமேஷ், பாபு, தங்கதுரை, அமுல் தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News