Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விரைவு ரயில் மோதி வயதான தம்பதி பலி: வெளிநாட்டில் வசிக்கும் மகனுக்கு தகவல்

செங்கல்பட்டு, நவ.6: தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, விரைவு ரயில் மோதி வயதான தம்பதி உயிரிந்த சம்பவம் மறைமலைநகரில் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த மறைமலைநகர் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை 2 சடலங்கள் கிடப்பதாக தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு ஒரு முதியவர் மற்றும் ஒரு மூதாட்டி என 2 சடலங்கள் இருந்தன. அந்த சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில், மறைமலைநகர், நின்னக்கரை, ரயில் நகர் பகுதியை சேர்ந்த செந்தில்வேலன் (82), அவரது மனைவி பசும்பொன் (71) என்பதும்,

இவர்கள் நேற்று முன்தினம் மாலை மறைமலைநகர் ரயில் நிலையத்தின் 1 மற்றும் 2ம் நடைமேடைகளுக்கு அருகில் ரயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் செந்தில்வேலன் மற்றும் அவரது மனைவி பசும்பொன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. இறந்தவர்களின் மகன் வெளிநாட்டில் உள்ளதால் அவருக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் வந்த பின்னர் தான், இருவரின் உடல்களும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு, வயதான தம்பதி எதற்காக அங்கு சென்றார்கள், தீபாவளி பண்டிகைக்காக ஏதாவது ஊர்களுக்கு சென்று விட்டு வந்தார்களா என்பது குறித்து தெரியவரும் என தாம்பரம் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.