Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெலிவரி ஊழியரிடம் செல்போன் பறிப்பு

வேளச்சேரி, மே 19: பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சாம்சங் பிரபாகரன் (21), பிரபல ஆன்லைன் நிறுனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு பொருட்களை டெலிவரி செய்வதற்காக தனது பைக்கில் சென்றபோது, பெரும்பாக்கம், நேசமணி நகர், மணி தெருவில் டெலிவரி செய்யக்கூடிய வீட்டை கண்டுபிடிக்க தனது மொபைலில் லொக்கேஷனை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த 4 பேர், பிரபாகரன் மொபைலை பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இந்த சம்பவம் குறித்து போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பெரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் கிடைத்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.