Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பரிதாப பலி

குன்றத்தூர், மே 7: மாதவரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சத்யாகுராஜ்(57). இவர் வீட்டிலேயே பேக் தைத்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை மூலக்கடையில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். பொன்னியம்மன்மேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி அருகே கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சத்யாகுராஜின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இதில் சத்யாகுராஜ் பலத்தை காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்து வந்த மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்கு பதிந்து விபத்து ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரிக்கின்றனர்.