தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காஞ்சி அத்திவரதர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

Advertisement

காஞ்சிபுரம்: புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி, முதல் நாளான நேற்று உலக புகழ்பெற்ற‌ அத்திவரதர் கோயில் என்றழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதம் நேற்று முதல் தொடங்கி உள்ளதையொட்டி, பெருமாள் கோயில்களில் விசேஷ பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில், 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், அத்தி வரதர் கோயில் என புகழ் பெற்றதுமான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதையொட்டி முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து புரட்டாசி விரதத்தை தொடங்க வருகை தந்தனர்.

புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி, அத்திகிரி மலையில் இருந்து கண்ணாடி மாளிகையில் எழுந்தருளிய தேவி, பூதேவி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்து வணங்கி புரட்டாசி விரதத்தை தொடங்கி சென்றனர். வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி, அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாள் மூலவர் சன்னதியில் நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயலாளர் சீனிவாசன் மற்றும் பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement

Related News