தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊராட்சி ஒன்றிய நிதியில் முறைகேடு

சேலம், ஜூலை 2:சேலம் அருகே ஊராட்சி ஒன்றிய நிதியில் முறைகேடு செய்ததாக, அதிமுக சேர்மன் மீது புகார் மனு அளிக்கப்பட்டது. சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், சங்ககிரி அடுத்த கன்னந்தேரியைச் சேர்ந்த வடிவேலு என்பவர் மனு அளிக்க வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கொங்கணாபுரம் அடுத்த கச்சுபள்ளி பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு பராமரிப்பு பணி மேற்கொள்ள ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் செய்யாமல் இருந்தது. இதுகுறித்து கொங்கணாபுரம் பிடிஓ அலுவலகத்தில் கேட்டபோது, முறையாக பதில் தராமல் தட்டிக் கழித்தனர். கடந்த 10 ஆண்டுகளில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குட்பட்ட பகுதியில் வளர்ச்சித் திட்ட பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. அதிமுக பிரமுகர் சேர்மனாக உள்ளார். இதுகுறித்து கேட்டதற்கு சரிவர பதில் அளிக்காததுடன், மிரட்டல் விடுத்தனர். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார். இதேபோல், ஓமலூர் அடுத்த மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், மயானத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Advertisement

Advertisement