தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தென்பெண்ணை ஆற்றில் பெரு வெள்ளம்: கடலூர்-புதுச்சேரி சாலை துண்டிப்பு

கடலூர், டிச. 3: கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கடலூர் தென்பெண்ணையாற்றில் பெரு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மதியம் சுமார் 2 மணிக்கு மேல் கடலூர்- புதுச்சேரி சாலையில், கங்கணாங்குப்பம் பகுதி முதல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதனால் இந்த சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் ஆல்பேட்டை சோதனை சாவடியில் பேரிகார்டுகள் அமைத்து பொதுமக்கள் அந்த வழியாக செல்லாமல் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் கஸ்டம்ஸ் சாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் இருந்து புதுச்சேரி மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Related News