தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அனுக்கூர், கல்பாடி அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்பு

 

பெரம்பலூர், ஜூலை 2: பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம் பேரளி அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த கஜபதி, வேப்பந்தட்டை ஒன்றியம் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்த செல்வகுமார் ஆகியோர் பணி ஓய்வு பெற்ற நிலையில், அந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அதே போல் கல்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்கனவே பணிஓய்வு பெற்ற நிலையில் அப்பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சிவக்குமார் தலைமை ஆசிரியராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பிறப்பித்த உத்தரவில், பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரான சுரேஷ் என்பவர் பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரான முத்துக் குமார் என்பவர் கல்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் உதவித் திட்ட அலுவலராக பணிபுரிந்து வந்த ஜெய்சங்கர் என்பவர் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜெய்சங்கர் அனுக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும், முத்துக்குமார் கல்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

Related News