தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதுக்கோட்டை நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா

புதுக்கோட்டை,டிச.31: புதுக்கோட்டை நகரில் உள்ள  ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை தெற்கு 4ம் வீதி பெரிய மார்க்கெட்யில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் திருச்சபையினர் சார்பில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் காலையில் பால் குடம் எடுத்து வந்து வழிபட்டனர்.

Advertisement

பின்னர் கோயிலில் ஆஞ்சநேயருக்கு பாலபிஷேகம், பன்னீர், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் சந்தனம், மஞ்சள் நீர், திருநீர் உள்ளிட்ட பூஜை பொருள்களில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.  ஆஞ்சநேயர் வெள்ளிக்கவசம், வடை மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோயிலில் உற்சவர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வீதி வழியாக பவனி வந்தார். இதில் பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் சிறப்புடன் செய்தனர்.

Advertisement