தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய் - குழந்தை திடீர் மாயம்: செங்கல்பட்டில் பரபரப்பு

Advertisement

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய், குழந்தை திடீரென மாயமாகினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் அருகே இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் புஷ்பலதா ஆகிய இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இந்த தம்பதிக்கு 2 வயதில் திரிஷா என்ற பெண் குழந்தையும் உள்ளது.

குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வசித்து வருகின்றனர். புஷ்பலதா தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றதாக கூறப்படுகின்றது.

இதனிடையே, இரண்டு வயது பெண் குழந்தை திரிஷாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு வயது பெண் குழந்தையை நேரில் பார்க்க புஷ்பலதாவின் சகோதரர் தனசேகர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர்களுடைய செல்போன் எண் அனைத்து வைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையிலும் இருவரும் இல்லாததால் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தனசேகர் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மாயமான தாய், குழந்தையை தேடி வருகின்றனர். செங்கல்பட்டில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் - மகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement