தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை, நவ.28: அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், 2 ஆண்டுகளுக்கான துணை கலெக்டர் பட்டியல், நடப்பாண்டிற்கான மாவட்ட வருவாய் அதிகாரி பட்டியல் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பில் நேற்று ஈடுபட்டனர். மேலும், கலெக்டர் அலுவலக தரை தளத்தில் அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இப்போராட்டம் தொடர்பாக சங்கத்தின் மாவட்ட தலைவர் ரமேஷ் கூறுகையில்,‘‘தற்போதைய அரசு பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள பணியிடங்களை கலைத்து அறிவித்து விட்டது. தற்போது நகர்புற நிலவரித்திட்ட பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, காலி பணியிடங்கள் நிரப்படாததால் கூடுதல் பணி சுமையுடன் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, வருவாய் துறை பணியிடங்களை அரசு கலைக்க கூடாது. மேலும், வருவாய் துறை ஊழியர்களுக்கு அதீத பணி பணி நெருக்கடி வழங்குவதை தவிர்க்க வேண்டும்’’ என்றார். இதில் ஏராளமான வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News