தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு அறிவிப்பு

தக்கலை, அக். 2: தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் குமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் தக்கலை அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரைமண்ட் தலைமை வகித்தார். மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் சாந்த சீலன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் டோமினிக் ராஜ் அறிக்கை சமர்ப்பித்தார். மாநில தலைவர் கண்ணன் சிறப்புரையாற்றினார். இதில் வட்டார, கல்வி மாவட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்விக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் நலத் திட்ட உதவிகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும். அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் நியமனம் பெற்ற அனைத்து நிலை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்தம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறுகின்ற மாநிலம் தழுவிய கையெழுத்து இயக்கத்தை வெற்றியடையச் செய்யவேண்டும். இந்த படிவங்களில் கல்வி ஆர்வலர்கள், பள்ளி நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கையெழுத்துக்களைப் பல்லாயிரக் கணக்கில் பெற்று 18.10.2024 அன்று கலெக்டரிடம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Advertisement