தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயம்பேட்டில் பூக்கள் விலை அதிகரிப்பு

போரூர், ஜன.18: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகளில் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லரை வியாபாரிகள் சொந்த ஊர்களுக்கு சென்றதாலும், மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வருகை குறைந்ததாலும் பூக்களின் விலை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதாலும், சொந்த ஊர்களுக்கு சென்ற சில்லரை வியாபாரிகளில் பலர் சென்னை திரும்பியதாலும் நேற்று காலை கோயம்பேடு பூமார்க்கெட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ₹1,200ல் இருந்து ₹2,000க்கும், ஐஸ் மல்லி ₹900ல் இருந்து ₹1,700க்கும், முல்லை ₹900க்கும், ஜாதி மல்லி ₹500ல் இருந்து ₹700க்கும், கனகாம்பரம் ₹800ல் இருந்து ₹900க்கும், அரளி பூ ₹150ல் இருந்து ₹200க்கும், சாமந்தி பூ ₹120க்கும், சம்பங்கி ₹100ல் இருந்து ₹120க்கும், பன்னீர் ரோஸ் ₹60ல் இருந்து 100க்கும், சாக்லேட் ரோஸ் ₹120ல் இருந்து ₹150க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்கள் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News