தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கண்டமனூர் பகுதியில் சின்னவெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

வருசநாடு, அக். 19: கண்டமனூர் பகுதியில் எட்டப்பராஜபுரம், கணேசபுரம், கோவிந்தநகரம், லட்சுமிபுரம், துரைச்சாமிபுரம், அண்ணாநகர், குப்பிநாயக்கன்பட்டி, ஆத்தங்கரைபட்டி, அய்யனார்கோவில், பொன்நிலம், உள்ளிட்ட கிராம பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சின்னவெங்காயம் விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முதற்கட்டமாக களையெடுக்கும் பணியும் உரம்போடுதல் பணியும், பூச்சி மருந்து தெளித்தல் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisement

மேலும் தற்பொழுது சின்ன வெங்காயத்திற்கு உகந்த நிலமாகவும் அமைந்துள்ளதால் ஒவ்வொருஆண்டும் சின்ன வெங்காயத்திற்கு இப்பகுதியில் முக்கியத்துவம் கொடுத்து விவசாயிகள் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அறுவடை காலங்களில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பாக வைத்து உரிய விலை கிடைக்கும் பொழுது இந்த சின்னவெங்காயத்தை தேனி, மதுரை, கம்பம், சின்னமனூர் போன்ற பகுதிகளுக்கு வாரச்சந்தைகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் காலச் சூழ்நிலைகளை அறிந்து விவசாயம் செய்வதினால் அதிக லாபம் பெறுவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் விவசாயிகளுக்கு ஏற்றவாறு விவசாய நிலத்துக்குச் சென்று கடமலைக்குண்டு வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைதுறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement