தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பு.புளியம்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: பட்டப்பகலில் துணிகரம்

 

சத்தியமங்கலம், ஜூலை 31: புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள செல்லம்பாளையம் தளபதி நகரரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (51). நேற்று காலை ஆறுமுகத்தின் மனைவி கவிதா வழக்கம்போல் அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு பூப்பறிக்கும் பணிக்கு சென்று விட்டார். காலை 9 மணிக்கு ஆறுமுகம் வீட்டை பூட்டிவிட்டு மனைவியிடம் வீட்டின் சாவியை கொடுத்துவிட்டு நம்பியூருக்கு வேலைக்கு சென்று விட்டார்.

இதற்கிடையே கவிதா பணி முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு திறந்த கடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், வீட்டிக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.20 ஆயிரம், கால் பவுன் தங்க கம்மல், 2 செட் வெள்ளி கொலுசு ஆகியவை திடுடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் புஞ்சை புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

 

Related News