தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கோபி அருகே முதியவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் உள்ளது

கோபி, ஜூலை 29: கோபி அருகே உள்ள எலத்தூர் நாகமலையில் முதியவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் இருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. கோபி அருகே உள்ள எலத்தூர் நாகமலையை சேர்ந்தவர் லிங்குசாமி (66). இவரது மனைவி ஈஸ்வரியின் தங்கை விஜயலட்சுமி (52). இவர்கள் நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்தனர். இதில், விஜயலட்சுமி வீட்டின் முன் பகுதியில் இருந்தபோது அங்கு வந்த கும்பல் கட்டையால் தாக்கி உள்ளது. விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த லிங்குசாமி மீதும் அந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், இருவரும் படுகாயமடைந்த நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட போலீஸ் எஸ்.பி சுஜாதா சம்பவ இடத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி சுஜாதா காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: லிங்குசாமி மற்றும் விஜயலட்சுமி மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது தொடர்பாக கடத்தூர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில் லிங்குசாமி மற்றும் விஜயலட்சுமி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு இடம் தொடர்பான பிரச்னை உள்ளது. அதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடந்து உள்ளது. இது தவிர வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News