தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தினருடன் கலெக்டர் சந்திப்பு

ஈரோடு,ஜூலை28: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவன உரிமையாளர்களுடன் நடைபெற்ற ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி கலந்துரையாடினார். ஈரோடு மாவட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது வழிவகைகள், முன்னேற்றங்கள், சந்திக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர்.

மேலும், இக்கலந்துரையாடலில் மாவட்டத்தின் வளர்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் பங்கு முக்கியம் என்றும், நகரமயமாகும் இரண்டாம் நிலை நகரங்களில் எழும் சவால்களுக்கு புத்தாக்க தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும், சமூகத்தின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கும் சமூகமாற்றத்திற்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கலெக்டர் குறிப்பிட்டார். மேலும் ஏ.ஐ, மின்சார வாகனங்கள், ஹெல்த் டெக் உள்ளிட்ட முன்னேற்றம் வாய்ந்த துறைகளைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகள், புதுமையான தொழில் நுட்பங்கள் மற்றும் நுகர்வோர் சேவைகளை சந்தைக்கு எவ்வாறு கொண்டு செல்ல முடியும் என்பது பற்றியும்கலந்துரையாடினர்.

இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (ஸ்டார்ட்அப்) குருசங்கர்,கோபிநாத், மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநர் ஜெகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related News