தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரூ.19.89 கோடி செலவில் பவானிசாகர் அணை புனரமைப்பு, மேம்பாட்டு பணிகள் தீவிரம்

சத்தியமங்கலம்,ஜூலை 26: பவானிசாகர் அணையில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் கட்டப்பட்டதாகும்.1948ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கி, 1955ம் ஆண்டு பணிகள் முடிந்து நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்ட பவானிசாகர் அணை தெற்கு ஆசியாவின் 2வது பெரிய மண் அணையாகும். பவானிசாகர் அணையின் கரையின் நீளம் 9 கி.மீ தூரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அணையின் கட்டுமானப் பணிக்காக வெளிநாட்டில் இருந்து நவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பவானிசாகர் அணையில் இருந்து செயல்படுத்தப்படும் கீழ்பவானி வாய்க்கால் பாசன திட்டத்தின் கீழ் ஈரோடு,திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்களும், பவானி ஆற்றின் வழியாக கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் அரக்கன் கோட்டை வாய்க்கால்களிலும்,பவானியில் உள்ள காலிங்கராயன் அணையிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்தின் மூலம் என மொத்தம் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்த அணை கட்டப்பட்ட பின் கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிகளில் உள்ள புன்செய் நிலங்கள் நன்செய் நிலங்களாக மாறியதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டதோடு லட்சக்கணக்கான கூலித் தொழிலாளர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைத்தது. அணை கட்டி முடிக்கப்பட்டு 70 ஆண்டுகள் ஆன நிலையில் தமிழக அரசின் பொதுப்பணி துறையின் மூலம் பவானிசாகர் அணையில் அவ்வப்போது பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி தற்போது நீர்வள ஆதாரத்துறை சார்பில் பவானிசாகர் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணி மேற்கொள்ள (டிரிப் 2) திட்டத்தின் கீழ் ரூ.19.89 கோடி நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது பவானிசாகர் அணையில் புனரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

Related News