Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குவிந்த சுற்றுலா பயணிகள் நீர் வரத்து குறைந்த போதும் குளித்து மகிழ்ந்தனர்

கோபி, மே 18: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் நீர்வரத்து குறைந்த போதும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு 15 அடி உயரத்தில் இருந்து அருவி போல் தண்ணீர் விழுவதாலும், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருவது வழக்கம்.

கோடை விடுமுறையை முன்னிட்டும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.