தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரோடு ஓரத்தில் ராட்டினங்கள் இயக்க தடை

அந்தியூர், ஆக.12: குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா இடங்களில் பாதுகாப்பற்ற முறையில் அரசு விதிகளை மீறி மெயின் ரோட்டின் ஓரத்தில் ராட்டினங்கள் அமைத்ததால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் நாளை (13-ம் தேதி) முதல் 17-ம் தேதி வரை 5 நாட்கள் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் தேர் திருவிழா மற்றும் மாநில அளவிலான கால்நடைச்சந்தை நடக்கிறது. திருவிழாவின் போது மக்களை மகிழ்விக்க பொழுதுபோக்கு அம்சங்கள் மூலமாக விதவிதமான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அவை அரசு விதிகளை மீறியும் பாதுகாப்பாற்ற முறையில் அந்தியூர்- பர்கூர் செல்லும் பிரதான சாலையில் மிக அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து கடந்த 9-ம் தேதி தினகரனில் செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக வருவாய்த் துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக நேற்று முன்தினம் ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருந்த இடங்களை ஆய்வு செய்தனர்.பின்பு அரசு விதிமுறைகளை மீறி இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட ராட்டினங்கள் இயங்கக்கூடாது என தடை விதித்தனர். மேலும் பொது மக்களை மகிழ்விக்கும் விதம் எனக் கூறி அச்சம் ஏற்படுத்தும் வகையில், அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களை இயக்கக் கூடாது எனவும் வருவாய்த்துறையினர் மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.