Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

பைக் விபத்தில் வாலிபர் பலி

கோவை, மே 7: கோவை பாப்பநாயக்கன் பாளையம் ஜெயசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (32). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது ஸ்கூட்டரில் அவிநாசி சாலையில் ரேஸ்கோர்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

எல்.ஐ.சி சிக்னல் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விழுந்தார்.

இந்த விபத்தில் விக்னேஸ்வரனின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு, மூக்கு மற்றும் காது வழியாக ரத்தம் கொட்டியது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விக்னேஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.