Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நண்பர் வெட்டிய மரக்கிளை தலையில் விழுந்து தொழிலாளி பலி

ஈரோடு,ஆக.3: மொடக்குறிச்சி தூரப்பாளையம் காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி நடராஜன் (65). இவரது நண்பர் கைலாசம். தூரப்பாளையம் காலனியில் உள்ள தங்கமணி பழனிச்சாமி என்பவர், தனது வீட்டின் முன்பு இருந்த பட்டுபோன மரத்தை வெட்ட வேண்டும் என நடராஜனிடம் கூறினார்.

அதன்பேரில் நடராஜனும் அவரது நண்பர் கைலாசமும் நேற்று முன் தினம் மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மரத்தின் மேலே இருந்து கிளைகளை கைலாசம் வெட்டி கொண்டிருந்தார்.

அப்போது, ஒரு மரக்கிளை கீழே இருந்த நடராஜன் தலையில் விழுந்தது. இதில், படுகாயமடைந்த நடராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிசைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.