தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எம்ப்ளாயிஸ் யூனியன் செயற்குழு கூட்டம்: அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு

திருச்சி, ஜன.24: திருச்சியில் தமிழ்நாடு சிவில் சப்ளையர்ஸ் கார்ப்பரேஷன் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைமை செயற்குழு கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு. திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் எம்பிளாயீஸ் யூனியன் தலைமை செயற்குழு கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் கோ.சி.வள்ளுவன் தலைமையில் தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் புதிய பேரவை நிர்வாகிகளை நியமித்த திமுக தலைமை கழகத்திற்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர். மண்டல சங்க தேர்தலை நடத்துவது, சங்கத்தின் எஞ்சிய கோரிக்கைகளை வென்றெடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இந்த கூட்டத்தில் அகில இந்திய (தொ.மு.ச பேரவையின் பொது செயலாளர்) சண்முகம் எம்பி, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர மேயர் அன்பழகன், மாநில பேரவை செயலாளர் எத்திராஜ், திருச்சி மண்டல தலைவர் ஆப்ரகாம், செயலாளர் ரவீந்திரன், பொருளாளர் ஆறுமுகம், உள்ளிட்ட மத்திய சங்க நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், மண்டல செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement