ஒட்டன்சத்திரம், மே 6: ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்புலிக்கு சிந்தலவாடம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (30) இவர் நேற்று விருப்பாட்சி சமத்துவபுரம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக எதிரே வந்த லாரி இவரது டூவீலர் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சத்திரப்பட்டி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



